என்ன செய்தார் மோடி !? #1YrofModi2.0
என்ன செய்தார் மோடி!? நான்கு ஆண்டு ஆட்சிக்கு பிறகு 'இந்தியா ஒளிர்கிறது' என பிரச்சாரம் செய்த வாஜ்பாய்க்கு மீண்டும் கிடைக்காத வாய்ப்பு, 'சௌகிதார்' - நாட்டை பாதுகாக்க வந்த காவலனே நான் தான் என கூறிய போது மோடிக்கு கிடைத்தது. வாஜ்பாய்-அத்வானி காலத்தில் அமைந்த மூன்று அரசும் கூட்டணி குருமாக்கள். குறைந்தபட்ச செயல்திட்டத்தால் கையை கட்டிக்கொண்டு அமைதியாக ஆட்சியில் இருக்க வேண்டிய நிலை. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சியை பிடித்து நின்றுவிட்டது என்பது மட்டுமே பெருமை. மோடி-அமித்ஷா காலம் வித்தியாசமானது. வியாபாரிகளின் பூமியான குஜராத்தில் இருந்து புறப்பட்ட மோடி ப்ராண்ட் இந்தியா முழுவதும் கல்லா கட்டியது. (அதே குஜராத் மாடலை இன்றைக்கு கொரோனா நேரத்தில், நீதிமன்றங்கள் சாட்டையடி கேள்விகளால் வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.) வளர்ச்சி அரசியலை முன் வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் நாள் தான் இந்தியாவுக்கான 'அட்சே தின்' என மோடி எடுத்துக்காட்டிய குஜராத் மாடலை நம்பி 10வருடங்களுக்கு பிறகு மீண்டும் தாமரையை மலரச்செய்தனர் மக்கள். முழு மெஜாரிட்டியை நெருங்கிய பிரம்மாண்ட வெற்றி. இந