இந்த குதிரை இன்னும் ஓயவில்லை...மீண்டெழுந்த தினேஷ் கார்த்திக்! #DK #Tamilnadu #SMAT
இந்த குதிரை இன்னும் ஓயவில்லை...மீண்டெழுந்த தினேஷ் கார்த்திக்! லாக்டவுணுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற்ற முதல் உள்ளூர் தொடரான சையத் முஷ்டக் அலி ட்ராஃபியில் தமிழ்நாடு அணி சாம்பியனாகியுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வென்றுள்ளது. 2007 இல் சையத் முஷ்டக் அலி ட்ராஃபியின் அறிமுக சீசனிலேயே தமிழக அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அப்போதும் தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்தான். 22 வயது இளைஞராக தமிழக அணியை துடிப்போடு வழிநடத்தி கோப்பையை வெல்ல வைத்தார். கேப்டன், கீப்பர், பேட்ஸ்மேன் என பல்திறன் மிக்கவராக இருந்தும் இந்திய அணியில் இவருக்கான தொடர் வாய்ப்புகள் கிடைத்ததே இல்லை. நீண்ட காலத்துக்கு பிறகு 2017 ல் நிதாஷ் ட்ராஃபியில் வங்கதேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக் அடித்த அடி அவரை மீண்டும் பிரபலமாக்கியது. அதன்மூலம் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் கிடைத்தது. ஐ.பி.எல் ல் கொல்கத்தா அணிக்கான கேப்டன் பதவி கிடைத்தது. ஆனால், மீண்டும் சறுக்கல்கள் தொடர இந்திய அணியில் இடமில்லாமல் போனது. கொல்கத்தா அணியின் கேப்டன் பதவி