எச்சரிக்கும் ஸ்மித்...பொன் முட்டையிடும் ஸ்டாய்னிஸ்..என்ன செய்யப் போகிறது இந்தியா!? #IndVsAus #India #Kohli #Rohit
300 நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் இந்திய அணி சிட்னியில் ஆஸிக்கு எதிராக சோபிக்குமா? Ind Vs Aus #Matchpreview ஐ.பி.எல் ஐ முடித்த கையோடு துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பறந்து சென்ற இந்திய அணி நாளை முதல் ஒருநாள் போட்டியை ஆடவிருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு புத்தியல்பு சூழலில் விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டதற்கு பின் இந்திய அணி விளையாடப்போகும் முதல் தொடர் இது. கடைசியாக பிப்ரவரியில் நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தது இந்திய அணி. அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற வேண்டிய தொடர், லாக்டவுண் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் களத்திற்கு திரும்பியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் லாக்டவுனுக்கு பிறகு இங்கிலாந்து சம்மரில் ஒரு தொடர் மட்டுமே ஆடியிருக்கிறது. அதன்பிறகு, ஐ.பி.எல் ஐ முடித்துவிட்டு இப்போதுதான் அவர்கள் சொந்தமண்ணில் முதல் தொடரை ஆடவிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்குமே இந்த சீரிஸ் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. உலகக்கோப்பையை நடத்துவதை விட இந்த சீரிஸை நடத்துவதில்தான் ஆஸ