தடுப்பூசி காலத்தின் கட்டாயம்! #CoviShield
தடுப்பூசி காலத்தின் கட்டாயம்! கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே தேவையில்லாத ஒரு பயம் இருப்பதை பார்க்க முடிகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடனே உடனே சுருண்டு விழுந்து இறந்து போவதாகவும்...இரத்தம் உறைந்து போவதாகவும்...கை கால்கள் இழுத்துக் கொள்வதற்காகவும் ஏகப்பட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பேசப்படுவதை காதுபட கேட்க முடிகிறது. இன்னும் சிலர், தடுப்பூசிகள் இலுமினாட்டிகளின் சதி என்கிற ரேஞ்சுக்கு கட்டுக்கதைகளை அள்ளிவிடுகின்றனர். மக்கள் கொரோனாவை பார்த்து பயப்படுவதை விட, தடுப்பூசியை பார்த்துதான் அதிகம் பயப்படுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. எனக்கு இதில் முதலிலிருந்தே ஒரு தெளிவான பார்வை இருந்தது. இப்படி ஒரு கொடூரமான நோய்க்கு நம் கையில் எந்த மருந்தும் இல்லாதபோது, நமது அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது நம் கடமை. மேலும், தடுப்பூசிகள் குறித்த வதந்திகளையும் நம்பக்கூடாது. குறிப்பாக, இணையத்தில் தடுப்பூசி குறித்து பரப்பப்படும் எந்த நெகட்டிவ்வான செய்தியையும் நம்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பிரதமர் மோடி டெல்லியின் தடுப்பூ