அடித்தட்டு மக்களை தள்ளி வைத்து பார்க்கிறதா அறிவியல் உலகம்??
#MyVoice அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை தள்ளி வைத்து பார்க்கிறதா அறிவியல் உலகம்? நிலவுக்கு மனிதரை அனுப்ப 10,000 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் தான், மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 17 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக காப்பாற்ற முடியாமல் திணறி வந்தனர், மீட்புக்குழுவினர். இராணுவம் , தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் என நாட்டில் இருக்கிற அனைத்து மீட்புக்குழுவினரும் கடுமையாக போராடி 1 மாதத்திற்கு அப்புறமாக 2 ஹெல்மெட்களை மட்டுமே கண்டுபிடித்தனர். அதன்பிறகு சில நாட்களில் 17 பேரில் வெறும் 2 பேரின் உடலை மட்டுமே கண்டுபிடித்தனர். தேடித்தேடி ஓய்ந்து போன மீட்புக்குழுவினரும் இராணுவத்தினரும் 2 மாதத்திற்கு பிறகு மீட்புபணியையே கைவிட்டுவிட்டனர். சுரங்கத்தில் தேங்கியிருந்த நீரை உறிஞ்சி வெளியேற்ற சக்தி வாய்ந்த பம்புகள் மீட்புக்குழுவினரிடம் இல்லாததே மீட்புப்பணிகள் தொய்வடைய காரணமாக கூறப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உயர்தர மீட்புப்படையிடம் சக்திவாய்ந்த ஒரு மோட்டார் பம்ப் இல்லை என்பதை எந்தவிதத்தில் எடுத்துக்கொள்வது ? டிஜ