நிர்பயா நிதியில் அசால்ட்டு காட்டும் மாநில அரசுகள் ! - பிரியங்காவின் மரணத்திற்கு யார் காரணம்?? #Priyanka #Telengana #RIPPriyanka #Justice4Priyanka
நிர்பயா நிதியில் அசால்ட்டு காட்டும் மாநில அரசுகள் ! - பிரியங்காவின் மரணத்திற்கு யார் காரணம்? தெலுங்கானா வை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரியங்கா வை எரித்து கொலை செய்த லாரி டிரைவர்கள் நால்வரையும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்துள்ளது தெலுங்கானா காவல்துறை, பாராட்ட வேண்டிய விஷயம் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்த பிறகு மட்டுமே முடுக்கமடைந்து விரைந்து செயல்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? குற்றவாளிகளை தேடிப்பிடித்து கைது செய்வது மட்டுமே காவல் துறையின் வேலை இல்லை. மக்களை குற்றங்கள் தீண்டாமல் இருக்கும் வகையில் கண்காணித்து பாதுகாக்க வேண்டியதும் காவல் துறையின் கடமை தான். பெண்கள் சம்பந்தமான வழக்கில் அலட்சிய போக்கு அரவேக்கூடாது என்பதற்கு தெலுங்கானா சம்பவம் மீண்டுமொரு துயரமான உதாரணமாக மாறியுள்ளது. டோல்கேட் அருகில் நிற்கிறேன் என சொன்ன பிரியங்காவின் மொபைல் சற்று நேரத்தில் சுவிட்ச் ஆஃப் ஆனவுடன் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த பிரியங்காவின் குடும்பத்தினர் அருகில் உள்ள ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில