அ(திர்ச்சி)மித் ஷா - சிறப்புக்கட்டுரை #Amitshah
உ.ஸ்ரீராமநாராயணன் அதிர்ச்சி 'ஷா' ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் சேவாக் களத்தில் இறங்கினால் சந்திக்கும் முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கி பந்துவீச்சாளர்களை அதிர்ச்சியடைய செய்வார். தற்போது முழு மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள மோடி2.0 அணியின் முக்கிய பேட்ஸ்மேனான அமித்ஷாவும் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலம் பலருக்கும் அதிர்ச்சியளித்து வருகிறார்.ஆனால் சேவாக் கின் சிக்சர்கள் ரசிகர்களின் உற்சாகத்தால் மைதானத்தை அதிரவைத்தன அமித்ஷா வின் அதிரடி சிக்சர்கள் சர்ச்சைகளாக மாறி ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைக்கின்றன. 'நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தியே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும்' என ஹிந்தி திவாஷ் எனப்படும் ஹிந்தி தினத்தில் பேசியசன் சூடு தணிவற்குள் பலகட்சி ஆட்சிமுறை இந்தியாவில் வெற்றிப்பெற்றுள்ளதா? எனக் கேட்டு அடுத்த நெருப்பை பற்ற வைத்துள்ளார் அமித்ஷா. 'அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் புறக்கணித்துவிட்டு இந்தி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என உள்துறை அமைச்சர் கூறியிரு