விஜயகாந்த் எனும் 'அஞ்சான்' | Vijayakanth Birthday Special |
'அவர் அப்பவே அப்டிங்க'- விஜயகாந்த் எனும் 'அஞ்சான்' அது '1996' ஏப்ரல் மாதம் தமிழகம் பரபரப்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து 'கலைஞருக்கு கலையுலக பொன்விழாவை' நடத்தப்போவதாக அறிவிக்கிறார் விஜயகாந்த். ' இந்த விழாவில் அரசியல் கலப்பு சிறிதும் கிடையாது. தேர்தலை கருத்தில்கொண்டு இவ்விழா நடத்தப்படவில்லை. நாங்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தபடிதான் இவ்விழாவை நடத்துகிறோம். இதற்கு யாராவது அரசியல் சாயம் பூசினால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் மீது எப்படிப்பட்ட முத்திரை குத்தினாலும் கவலையில்லை' என்று கூறி கலைஞரின் கலையுலக பொன்விழாவில் மொத்த திரையுலகத்தையும் கலந்துக்கொள்ள செய்து கலைஞருக்கு ஆறடி உயரமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பேனாவையும் நினைவுப்பரிசாக அளிக்கிறார். இந்த நிகழ்ச்சி நடந்தபோது ஜெயலலிதா அவர்கள்தான் முதல்வர். திமுக 91' தேர்தலில் மிகப்பெரிய படுதோல்விக்கு பிறகு மீண்டெழ தயாராகிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஜெயலலிதாவின் அந்த 91-96 கால அரசியலைப் பற்றி குறிப்பிடும்