ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3
இந்திய அணி 146-3 என்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்திருந்தது. இரண்டாம் நாளில் இருதரப்புமே சம அளவில்தான் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. வருணபகவானின் புண்ணியத்தால் மழையின் குறுக்கீடு பெரிதாக இல்லை. அதனால் இரண்டாம் நாளை விட அதிக ஓவர்கள் வீசப்பட்டது. இரண்டாம் நாளின் தொடர்ச்சியாக ரஹானேவும் கோலியும் க்ரீஷுக்கு வந்தனர். ஜேமிசனும் போல்ட்டும் முதல் ஸ்பெல்லை வீசினர். இரண்டாம் நாளில் தட்டுத்தடுமாறியிருந்த ரஹானே நேற்று கொஞ்சம் நல்ல டச்சில் இருந்தார். போல்ட்டை அவர் டிஃபன்ஸ் செய்த விதத்தை கமெண்ட்ரி பாக்ஸில் தினேஷ் கார்த்திக்கும் நாஸீர் ஹுசைனும் சிலாகித்து கொண்டிருந்தனர். கோலியும் இன்னொரு எண்ட்டில் நல்ல கண்ட்ரோலான முறையிலேயே ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சீக்கிரமே அவுட் ஆகிவிட்டார். ஜேமிசன் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே 5-6 ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து வீசி கோலியை செட் செய்து திடீரென ஒரு இன்கம்மிங் டெலிவரியை வீசி ஏமாற்றி lbw ஆக்கினார். இரண்டு நாட்களாக ஜேமிசன் வெறும் 7 பந்துகளை மட்டுமே ஸ்டம்ப்பை அட்டாக் செய்யுமாறு வீசியிருந்தார். கோலிக்கு ஒர...